உணவில் சாகிறது பசி
பசியில் சாகிறது உணவுருசி
உணர்ச்சியில் சாகிறது அறிவு
அறிவில் சாகிறது உணர்ச்சி
உவப்பில் சாகிறது கவலை
கவலையில் சாகிறது உவப்பு
இருட்டில் சாகிறது பகல்
பகலில் சாகிறது இருட்டு
அத்தனையும் செத்துப் பிழைக்க
சாகாதும் பிழைக்காதும் இருப்பது
நீயும் நானும்
Thursday, September 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment