Thursday, September 23, 2010

சுழற்சி

உணவில் சாகிறது பசி
பசியில் சாகிறது  உணவுருசி

உணர்ச்சியில் சாகிறது அறிவு
அறிவில் சாகிறது உணர்ச்சி

உவப்பில் சாகிறது கவலை
கவலையில் சாகிறது உவப்பு 

இருட்டில் சாகிறது பகல்
பகலில் சாகிறது இருட்டு

அத்தனையும் செத்துப் பிழைக்க
சாகாதும் பிழைக்காதும்  இருப்பது



நீயும் நானும்

No comments: