Thursday, December 17, 2009

அநித்திய சுகம்

கம்பிக் கதவைத் தாண்டி

கொத்திஎடுத்து எடையிட்டபோது
கூடவோ குறையவோ இருந்திருக்கவேண்டும்

அதை தரையில் வீசிவிட்டு வேறொன்றை தேட
கழுத்து முறிவினின்று

கணதூரத்தில் தப்பிய சேவல்

கூட்டத்தில் கலந்து, கூட்டம் கலைத்து

பேடை துரத்திச் சிலிர்த்து

சிறகு பரப்பிச் சீறிப் புணர்ந்து

மறுபடி இரை கொத்தச் செல்லும்

சாவதானம்

எதுவும் அறியாமலா?

எல்லாவற்றையும் அறிந்தா?