Saturday, February 7, 2009

மனித மரம்

என் மீது விழும் அட்சதைகள்
விதைகள்
என் மீது விழும் சேறுகள்
உரங்கள்
என் மீது உமிழப்படும் காற்று
உயிர்க்காற்று
என் மீது எறியப்படும் அம்புகள்
என் வேலிகள்
நான் வீசப்படும் மூலை
என் விளைநிலம்
என்றும்
என் கனிகள் எல்லோருக்கும்தான்
ஏன் என்றால்
நான் மரமனிதன் அல்ல
இறைவன் சந்நிதியில்
மனித மரம் . மனம்.