Friday, March 20, 2009
தோழி
ஒரு கனவின் மிதப்பில் வராது போனாலும்
ஒரு குதூகலத்தின் உச்சியில்மறந்துபோனாலும்
ஒரு சுகத்தின் நெகிழ்வில் நிற்காது போனாலும்
ஒரு சுவையின் விளிம்பில் தவழாது போனாலும்
ஒரு செருக்கின் நுனியில் ஆடாமல் போனாலும்
ஒரு வெற்றியின் முடிவில் தவழாது போனாலும்
என் வலியின் போது பொறுமையாகவும்
என் காயத்தின் போது வலிமையாகவும்
என் சோர்வின்போது வருடலாகவும்
என் இமைகள் நனையும்போது தென்றலாகவும்
ஒரு முறை கூட தவறாது வரும்
நீதான் இந்த சுய நல வாதியின்
என் உயிர்த்தோழி
ஒன்றிலொன்று
உண்மையைப் பொய்யில்
சுருட்டி வைக்க முடியுமா?
தீயைப் பூவில்
அடக்கி வைக்க முடியுமா?
காற்றை நீரில்
பதுக்கிவைக்க முடியுமா?
நீரை நிலத்தில்
புகுத்தி வைக்க முடியுமா?
என்னை என்னில்
புதைத்து வைக்க முடியுமா?
குரல்
என்னைக் கூப்பிட்டமாதிரி இருந்ததே
கூப்பிட்டயா?
இல்லையே..
நிச்சயம் கூப்பிட்டமாதிரிதான் இருந்தது
நானில்லை. வேறு யாராவதாக இருக்கலாம்
இல்லை. உன் குரல்தான் அது
அப்படியெனில் குரல் என்னுடையதாகவும்
அழைப்பு உன்னுடயதாகவும்
இருந்திருக்கலாம்.