Tuesday, February 22, 2011

மீட்பு

மீட்பு

வரிசையிலிருந்து வழுக்கி
கண்ணுக்குள்ளேயே விழுந்துவிட்ட  இமை  

வாயிலிருந்து தப்பி
வாழ்க்கைக்குள்ளேயே விழுந்துவிட்ட சொல்

இரண்டையுமே

கண்ணீரோடுதான்  துடைத்தெடுக்க முடிகிறது