கருப்பு வெள்ளை காலத்திற்கு முன்பே
வர்ணங்கள்
தனித்தும் இணைந்தும்
நிறமாலைகள் இருந்ததாம்
புது வர்ணங்கள் வந்தபின்
ஒற்றைநிற ஒளிப் பாய்ச்சலில்
காணாமல் போயின பழைய வர்ணங்கள்
எனினும் -
வர்ண விளக்கானாலும்
ஒற்றைநிற விளக்கானாலும்
ஏனோ
எல்லாப் பொருட்களின் நிழலும்
ஒரே நிறத்தனவாய்