Thursday, December 18, 2014

சீறல்கள்

சீறல்கள்

பூவிதழின்
மடல் அடி நிறமென
விளக்கின்
திரி நுனி மங்கென
மனிதனை மனிதனாகவே
வைத்திருக்கும் பலவீனங்கள்
உலர் நா

ஏரிக்கோடியில் புதர்பரப்பிய
விழல்களின்  ஈர நிழல்களில்
தீண்டல் மறந்துறங்கும்
சர்ப்பங்களை
சீண்டும் சிற்றலைகள்

சுருள் கலைகையில்
எள்ளலாய் சிரிக்கும் சிற்றலைகள் மேல்
சீறி விழும் ஆதிப் பசியுடன்