Tuesday, September 4, 2007

ஏன்

கடிதம் ஒன்று எழுதியாயிற்று
சொல்ல வந்ததை
வரிகளுக்கிடையே மறைத்து எழுதியாயிற்று
பதில் கடிதத்தில்
கேட்க விரும்பியதை
வரிகளுக்கிடையே கண்டு படித்தாயிற்று
எழுதியதும் படித்ததும் நானாக
எழுதியது ஏன் படித்தது ஏன்
இதற்கான பதிலைப் படிக்கவில்லை