skip to main |
skip to sidebar
கடலோரம்
உங்கள் அறிவுடைமை
சமுத்திரத்தின் விஸ்தீரணம்
என் போதாமைகள்
நிலத்தின் விஸ்தீரணம்
புத்தகமொன்றை கையிலெடுக்கையில்
காலாற நடக்கிறேன்
கடற்கரையில்
சிற்றலை சிறுமணல்
தழுவ தழுவ
சுடர்
எங்கிருந்தோ எகிறி வந்து
அமர்ந்தது
பொறி ஒன்று
பற்றிக் கொண்டு
எரிந்தபடி
மூச்சுக் காற்றில்
இருள் சூழ அணைக்கையில்
உறைந்தது ஒன்று
கரைந்தது ஒன்று