Wednesday, February 27, 2013

புதின ஓவியம்

என் புதினத்தின்
சில பக்கங்களில்
வந்து போயிருந்த ஒரு
கதா பாத்திரத்தை
வரைந்து கொண்டு வந்து
காட்டினான் வாசகன் 

கற்பனையைக் கடன் வாங்கிக் கொண்டது போல் 
அப்படியே 
நான் நினைத்திருந்தது போலவே
நான் விவரித்திருந்தது போலவே


உயிர்  பெற்ற வரியாய்
உதடசைத்தபடி 
அது பேசியபோது
அதில் ஒன்று கூட
நான்   பேசச் சொன்னது இல்லை





குருவி 

அசையும்  கிளையொன்றில் 
அமர்ந்திருக்கும் குருவி 
அவ்வப்பொழுது 
தன் நேற்றைக்குள்ளும் 
அவ்வப்பொழுது 
தன்  நாளைக்குள்ளும் 
பறந்து மிதந்து 
மீண்டபடியே இருக்கிறது 

ஆனால்  
சிறகில் ஒட்டிய 
சாம்பல்  தூளிகளும் 
சூல் மகரந்தப் பொடிகளுமாய் 
அமர்ந்திருக்கும் அக்குருவி 
அந்த அசையும் கிளைவிட்டு
அகன்றதில்லை 
எப்போதும்