Wednesday, February 27, 2013

குருவி 

அசையும்  கிளையொன்றில் 
அமர்ந்திருக்கும் குருவி 
அவ்வப்பொழுது 
தன் நேற்றைக்குள்ளும் 
அவ்வப்பொழுது 
தன்  நாளைக்குள்ளும் 
பறந்து மிதந்து 
மீண்டபடியே இருக்கிறது 

ஆனால்  
சிறகில் ஒட்டிய 
சாம்பல்  தூளிகளும் 
சூல் மகரந்தப் பொடிகளுமாய் 
அமர்ந்திருக்கும் அக்குருவி 
அந்த அசையும் கிளைவிட்டு
அகன்றதில்லை 
எப்போதும் 

No comments: