Friday, October 19, 2012

இன்னும் பறந்து கொண்டிருக்கும் பறவை





மீன்கொத்தி  ஒன்று
அமைதி சலசலத்த
நீர்ப் பரப்பின்மேல் அந்தரத் தொங்கலாய்

ஒரு கணத்தின் துணுக்கில்
நேர்க்குத்தாய் வீழ்ந்த கல்லென
'பளக்' கென்று மீன் கொத்திப் போனது

மற்றொரு முறை
அந்த கணத்திற்காக காத்திருந்து 
உயர் ரக காமிராவில் படம் பிடித்து வைத்துப்
பார்த்தேன். 

மீண்டும் மீண்டும் அதைப் பார்த்தேன்

பின் 
ஒரு ஞாயமான நொடியில் 
பதிவு செய்த இயற்கை
பார்த்து ரசித்த இயற்க்கைக்கு செய்யும்
அவமரியாதை என உணர்ந்து

அழித்தேன் 


No comments: