Monday, October 15, 2012

சொல்லம்பு

பரம்பரையின்
கால வெள்ளத்தில் மூழ்கி
எண்ணச் சேற்றில் புதைந்து
நினைவுகளில் அரிப்பில் சிதைந்து
முனை மழுங்கி
துருவேறிக் கிடந்த  அம்பொன்றை

யதேச்சையாக வீசியபோது

தனது சிருஷ்டி புதுக் கருக்கில்
தைத்தது போலவே
தைத்தது
சொல்லம்பு 


No comments: