Monday, October 15, 2012

கேள்விகள்

விடக்கூடாது.

கேட்டுவிடவேண்டும்  என்று
தொண்டையில் சேமித்த கேள்விகள்
சிக்கிக் கொண்டன சமயம்  வாய்த்த போது

மறுமுறை - தயாராக வைத்திருந்து
வீசக் காத்திருந்தபோது
எதிர்கொள்ளும் மன நிலையில் அவர் இல்லை

இன்னொருமுறை சமயம் வாய்த்தபோது
ஏனோ கேட்க இஷ்டமில்லை

மற்றொரு முறை
எல்லாம் சரியாக அமைந்திருந்தது
ஆனால் அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது


நான் கேட்கவிருந்த  கேள்விகளுக்கான
அவருடைய பதில்
என்னிடமே இருந்தது என்பதை
ஏதோ ஒரு கணத்தில்  அறிந்த போது 
குழப்பாக இருந்தது

நான் கேட்க விரும்பியவை
யாரிடம் ?





No comments: