அடிப்பது போல சாட்டையை
சொடக்கினேன்
அடிக்காமல்.
வலித்ததுபோல் துடித்து
அழுதாய்
வலிக்காமல்.
பழகிப்போனோம்.
ஆனால்
எப்போது அடிக்கிறேன் என்று
எனக்கும் தெரியவில்லை
எப்போது வலிக்கிறது என்று
உனக்கும் தெரியவில்லை.
எது அடி எது வலி என்றும்
எவருக்கும் தெரிவதில்லை.
k
Wednesday, April 22, 2009
Friday, April 10, 2009
இரவல்
யதேச்சையான
ஒரு சந்திப்பின் நீளம் சிநேகம்
எதிர்பாராத ஆனால் காத்துக்கொண்டிருந்த
ஒரு சந்திப்பின்போது
பேச்சின் நெருக்கத்தில்
என்னில் குரங்கொன்று விழித்துக்கொண்டது சப்தமின்றி
பேச்சின் மீது வைத்த தக்கையை கவனித்தபடி
அப்போது தெரிந்தது
அவளும் மறைக்க முயன்றுகொண்டிருந்த அவளுடைய குரங்கு
மௌனத்தினால் ஒரு மதில் .
மிருதுவான கணம் ஒன்றில் இரவல் கேட்க ஆசை
இரவல் தரும் ஆசையும் வெளிப்பட,
மதில் ஏறி குதித்தது ஒரு பூனை ஓசையின்றி
இரவலாக பரிமாறிக்கொள்ள விழைந்தபோது
ஒரு பிசகிய கணத்தில்
சட்டென கைநழுவி பட்டென உடைந்து தெறித்தது
சுதாரித்து பின்
காயம் படாமல் பொறுக்கிக்கொண்டிருந்தோம் சில்லுகளை
இன்னும் பூனையை விரட்டாமலேயே
Subscribe to:
Posts (Atom)