Wednesday, April 22, 2009

அடி

அடிப்பது போல சாட்டையை
சொடக்கினேன்
அடிக்காமல்.

வலித்ததுபோல் துடித்து
அழுதாய்
வலிக்காமல்.

பழகிப்போனோம்.

ஆனால்
எப்போது அடிக்கிறேன் என்று
எனக்கும் தெரியவில்லை
எப்போது வலிக்கிறது என்று
உனக்கும் தெரியவில்லை.
எது அடி எது வலி என்றும்
எவருக்கும் தெரிவதில்லை.


















k

No comments: