அடிப்பது போல சாட்டையை
சொடக்கினேன்
அடிக்காமல்.
வலித்ததுபோல் துடித்து
அழுதாய்
வலிக்காமல்.
பழகிப்போனோம்.
ஆனால்
எப்போது அடிக்கிறேன் என்று
எனக்கும் தெரியவில்லை
எப்போது வலிக்கிறது என்று
உனக்கும் தெரியவில்லை.
எது அடி எது வலி என்றும்
எவருக்கும் தெரிவதில்லை.
k
Wednesday, April 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment