Friday, April 10, 2009

இரவல்

யதேச்சையான

ஒரு சந்திப்பின் நீளம் சிநேகம்

எதிர்பாராத ஆனால் காத்துக்கொண்டிருந்த

ஒரு சந்திப்பின்போது

பேச்சின் நெருக்கத்தில்

என்னில் குரங்கொன்று விழித்துக்கொண்டது சப்தமின்றி

பேச்சின் மீது வைத்த தக்கையை கவனித்தபடி

அப்போது தெரிந்தது

அவளும் மறைக்க முயன்றுகொண்டிருந்த அவளுடைய குரங்கு

மௌனத்தினால் ஒரு மதில் .

மிருதுவான கணம் ஒன்றில் இரவல் கேட்க ஆசை

இரவல் தரும் ஆசையும் வெளிப்பட,

மதில் ஏறி குதித்தது ஒரு பூனை ஓசையின்றி

இரவலாக பரிமாறிக்கொள்ள விழைந்தபோது

ஒரு பிசகிய கணத்தில்

சட்டென கைநழுவி பட்டென உடைந்து தெறித்தது

சுதாரித்து பின்

காயம் படாமல் பொறுக்கிக்கொண்டிருந்தோம் சில்லுகளை

இன்னும் பூனையை விரட்டாமலேயே

No comments: