Friday, March 20, 2009

தோழி

ஒரு கனவின் மிதப்பில் வராது போனாலும்

ஒரு குதூகலத்தின் உச்சியில்மறந்துபோனாலும்

ஒரு சுகத்தின் நெகிழ்வில் நிற்காது போனாலும்

ஒரு சுவையின் விளிம்பில் தவழாது போனாலும்

ஒரு செருக்கின் நுனியில் ஆடாமல் போனாலும்

ஒரு வெற்றியின் முடிவில் தவழாது போனாலும்

என் வலியின் போது பொறுமையாகவும்

என் காயத்தின் போது வலிமையாகவும்

என் சோர்வின்போது வருடலாகவும்

என் இமைகள் நனையும்போது தென்றலாகவும்

ஒரு முறை கூட தவறாது வரும்

நீதான் இந்த சுய நல வாதியின்

என் உயிர்த்தோழி

No comments: