ஒரு கனவின் மிதப்பில் வராது போனாலும்
ஒரு குதூகலத்தின் உச்சியில்மறந்துபோனாலும்
ஒரு சுகத்தின் நெகிழ்வில் நிற்காது போனாலும்
ஒரு சுவையின் விளிம்பில் தவழாது போனாலும்
ஒரு செருக்கின் நுனியில் ஆடாமல் போனாலும்
ஒரு வெற்றியின் முடிவில் தவழாது போனாலும்
என் வலியின் போது பொறுமையாகவும்
என் காயத்தின் போது வலிமையாகவும்
என் சோர்வின்போது வருடலாகவும்
என் இமைகள் நனையும்போது தென்றலாகவும்
ஒரு முறை கூட தவறாது வரும்
நீதான் இந்த சுய நல வாதியின்
என் உயிர்த்தோழி
No comments:
Post a Comment