என் மீது விழும் அட்சதைகள்
விதைகள்
என் மீது விழும் சேறுகள்
உரங்கள்
என் மீது உமிழப்படும் காற்று
உயிர்க்காற்று
என் மீது எறியப்படும் அம்புகள்
என் வேலிகள்
நான் வீசப்படும் மூலை
என் விளைநிலம்
என்றும்
என் கனிகள் எல்லோருக்கும்தான்
ஏன் என்றால்
நான் மரமனிதன் அல்ல
இறைவன் சந்நிதியில்
மனித மரம் . மனம்.
Saturday, February 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment