Friday, August 8, 2008

மனிதம்

இருக்கைகள் நிரம்பி விட்டிருந்த
பேருந்தில்
உட்கார்ந்திருந்த பலரும்
ஆசுபத்திரி நிறுத்தத்தில்
கைக்குழந்தையோடும்
காதுகப்பிய மப்ளருடன்
வெளிறிய முக மனைவியொடும்
ஏறிய கணவனின் பார்வைக்குத் தப்பி
தூக்கத்திலிருப்பதாகவும்
படிப்பதாகவும்
நீண்ட யோசனையில் இருப்பதாகவும்
வெளியே வேடிக்கை பார்ப்பதாகவும்
பலவாறாக பாவனை செய்ததில்
வழிந்தோடிக்கொண்டிருந்ததது
மனிதாபிமானம்

No comments: