இருக்கைகள் நிரம்பி விட்டிருந்த
பேருந்தில்
உட்கார்ந்திருந்த பலரும்
ஆசுபத்திரி நிறுத்தத்தில்
கைக்குழந்தையோடும்
காதுகப்பிய மப்ளருடன்
வெளிறிய முக மனைவியொடும்
ஏறிய கணவனின் பார்வைக்குத் தப்பி
தூக்கத்திலிருப்பதாகவும்
படிப்பதாகவும்
நீண்ட யோசனையில் இருப்பதாகவும்
வெளியே வேடிக்கை பார்ப்பதாகவும்
பலவாறாக பாவனை செய்ததில்
வழிந்தோடிக்கொண்டிருந்ததது
மனிதாபிமானம்
Friday, August 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment