உனக்குகந்த பொய்களை
உண்மையின் சாயம் பூசி
உன்னிடம் பேசிப் பேசி
கசந்து போகின்றன என் உண்மைகள்
உன்னுடைய ஓவியங்களை
உண்மையில் இயற்க்கை என்று
உன்னிடம் சொல்லி சொல்லி
இற்றுப் போகின்றன என் இயற்கைகள்
உன்னுடைய குரலை என்றும்
உண்மையில் குழல்தான் என்று
உன்னிடம் சொல்லி சொல்லி
மரத்துப் போகின்றன என் ராகங்கள்
உன்னுடைய இதழை என்றும்
உண்மையில் கனியே என்று
உன்னிடம் சொல்லிச் சொல்லி
உவர்த்துப் போகின்றன என் ருசிகள்
உன்னுடைய கண்களை என்றும்
உண்மையில் கனிவே என்று
உன்னிடம் சொல்லிச் சொல்லி
பறி போகின்றன என் பார்வைகள்
உனக்கில்லா எல்லாவற்றையும்
உண்மையில் உனதே என்று
உன்னிடம் சொல்லிச் சொல்லி
இழந்து கொண்டிருக்கிறேன் என்னை
Friday, September 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment