Thursday, September 23, 2010

அறிதல்

விழுந்தபின் வீசப்பட்டபல்லிற்கு தெரியுமா
தன்னிடம் காட்டப்பட்ட அலட்சியத்தைப் பற்றி?

அறுந்தபின் வீசப்பட்ட செருப்பிற்குத் தெரியுமா
தனக்கு நேர்ந்த அவமதிப்பை பற்றி?

எரிந்தபின் எறியப்பட்ட தீக்குச்சிக்கு தெரியுமா
தனக்கு ஒரு கணத்தில் நேர்ந்த கொடுமை பற்றி?

படிந்த சீவலுக்குப்பின் இடக்கையிலுள்ள முடிக்குத் தெரியுமா
தனக்கு சிகையிநின்று வீழ்ந்த சிறுமை பற்றி?

செழித்தபின் வெட்டி வீசப்பட்ட நகத் துணுக்குகளுக்கு தெரியுமா
தன்னுடைய அழகின் நிலையாமை பற்றி?

கூடழிக்கப்பட்டபின் அலையும் தேனீக்களுக்கு தெரியுமா
தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பற்றி?

கலைந்து விட்ட கனவுகளுக்கு தெரியுமா
தங்களுக்கு நேர்ந்த சேதங்களைப் பற்றி?

No comments: