மஞ்சளில் கறுப்புப் புள்ளி சிதறிய
பட்டாம்பூச்சி,
நுரையீரலை நியாபகப்படுத்தும்படி
கொல்லன் துருத்தியின் சுவாசம்போல
என் பிராயக் கனவில்
பின் நினைவில் நனவில் என்மேல் படிந்த
பட்டாம்பூச்சி
கண்ணில் பட்டது பின் சட்டென
பறந்து வந்து என் நெற்றிமேல் வந்தமர்ந்தது
பின் தாவி காதில் அமாந்தது குறுகுறுத்தது
சிரித்தால் குலுங்கலில் பயந்து பறந்துபோகுமே என
சிரிப்படக்கி குறுகுறுவில் முகிழ்த்தேன்
பிறகு என் தோளில் அமர்ந்தது,
அதன் சிறகசைப்பு கீழக்கன்னத்தில் சிலிர்த்தது
காதலுற்றேன் அதன்மேல், கண்மூடி ரசித்தேன்,
அப்போது
என் கண்இமை மேல் வந்தமர்ந்தது,
கண்ணைத்திறக்கமுடியாதபடி,
கண்இமை நுழைந்து கண் உள் படிந்தது
என் கனவில் தோய்ந்து களிப்பூட்டியது
பரவசம் முடிந்து கண்திறந்தபோது
பறந்துவிட்டிருந்தது,
இப்போது யதேச்சையாய் உணர்ந்தேன்
அதே பட்டாம்பூச்சி
என் கண்ணிலும் காதிலும் கழுத்திலும்
மறுபடி உட்கார்கிறதை
ஆ னா ல்,,,,,,,,,,,,,
என் கண்ணாடிப் பிம்பம்மேல்
மஞ்சளில் கறுப்புப் புள்ளி சிதறிய
பட்டாம்பூச்சி,
நுரையீரலை நியாபகப்படுத்தும்படி
கொல்லன் துருத்தியின் சுவாசம்போல
Saturday, June 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment