Monday, December 30, 2013

த்யானம்

த்யானம் 

கணுக்கள்
காலத்தின் கணக்கெனத்
தடிக்க
நட்டபுள் நெடிது வளர்ந்தது
பூதங்கள் தின்று
நீர்ச்சுவை ஏற்றி

அடி நுனி சுவைகள்
விலகி நிற்கக் கண்டதெல்லாம்
உண்டவர்க்கே

தன்னில் தனை உணர
தான் வளர்ந்து
நான் ஒறுத்து

தலையில் பச்சைத் தாமரை
தோகை விரிக்க
போகிற போக்கில்
அதைத்
தொட்டுப் போகிறது
ஒரு பட்டாம் பூச்சி


No comments: