Sunday, September 4, 2011

சாகா வார்த்தைகள்

சில பழையதாயும்
சில புதிதாய் சேர்த்தும்
விரல் கணுக்களில் தட்டி சோதித்து
கவிழ்த்து வைக்கப்பட்ட பானைகள்
தலைமுறை களாய்

கைதவறியோ
அவசர  எலி உருட்டியோ
ஆவேசப் பூனை உருட்டியோ
சரிந்தன சில்லோடுகளாய்
ஆளுக்கொரு சில் லெடுத்து அவரவர் 
வீசியது போக 

காலம் சிதைத்த பாழ் குளத்தில் 
எதேச்சையாய் எடுத்து வீசும்போதும் 
அது வீசும் அலைகள்
வார்த்தைகளென தைத்து விரியும்

குளத்தரை அடிச் சகதியிலும்
அம்பெனப் புதைந்து 
காத்துக் கிடக்கும் தூர் வாரும் தினம் நோக்கி
சாவற்ற
சாகடிக்கும் வார்த்தைகள்    
 



   




    
 

No comments: