Sunday, September 4, 2011

அவன்

அவனை 
புத்திசாலி என்றெண்ணும் முட்டாள்களுக்கு
நிறை வார்த்தைகளில்
நீவிக் கொடுக்கிறான்.

அவனை 
முட்டாளென் றெண்ணும் 
புத்திசாலிகளிடம்
பட்ட காயத்தை நக்கிக் கொள்கிறான்

அவனை
புத்திசாலி என்றெண்ணும்
புத்திசாளிகளுடன்
மெளனமாக கைகுலுக்கி
முறுவலிக்கிறான்.

அவனை 
முட்டாளென் றெண்ணும் 
முட்டாள்களிடம்
சேர்ந்து மகிழ்ந்து சந்தோஷிக்கிறான் 

என்னே
சந்தோஷகரமான
சந்தோஷமயமான
வாழ்விது!      



No comments: