Wednesday, September 16, 2009

என் சொல்ல

என் எண்ணத்தை அவனால் படிக்கமுடிகிறது
என்பதையும்
என் நினைப்பை அவனால் ஊகிக்கமுடிகிறது
என்பதையும்
என் நினைவை அவனால் இசைக்கமுடிகிறது
என்பதையும்
என் சலனங்களை அவனால் குறிப்பறியமுடிகிறது
என்பதையும்
என் பழைய சின்ன ஆசைகளை புதுப்பித்துக்கொள்ளும் நினைவு
என்பதையும்
அவனறிவதை நானறியும்போதும்
நானறிவதை அவனறியும்போதும்

இதுவரை துணைக்குவந்த வார்த்தைகள்
ஊமையாகி நிற்கின்றன

அப்போது துலங்குகின்றன
பழகிய வார்த்தைகளில்
பகிர விரும்பும் படிமங்கள்

No comments: