என் எண்ணத்தை அவனால் படிக்கமுடிகிறது
என்பதையும்
என் நினைப்பை அவனால் ஊகிக்கமுடிகிறது
என்பதையும்
என் நினைவை அவனால் இசைக்கமுடிகிறது
என்பதையும்
என் சலனங்களை அவனால் குறிப்பறியமுடிகிறது
என்பதையும்
என் பழைய சின்ன ஆசைகளை புதுப்பித்துக்கொள்ளும் நினைவு
என்பதையும்
அவனறிவதை நானறியும்போதும்
நானறிவதை அவனறியும்போதும்
இதுவரை துணைக்குவந்த வார்த்தைகள்
ஊமையாகி நிற்கின்றன
அப்போது துலங்குகின்றன
பழகிய வார்த்தைகளில்
பகிர விரும்பும் படிமங்கள்
Wednesday, September 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment