எவ்வளவு முயன்றாலும்
பேனாவின் மூடிகளை மறந்துவிடும்
அசிரத்தைகளை
விரட்டமுடிவதில்லை
மூடியற்று கிடக்கும் பேனா முடிதுறந்த அரசனையையும்
பேனாவை இழந்த மூடி
சீவப்பட்டு உருண்ட தலையையும்
போன்ற படிமமாக
சமயத்தில்
அவை
நான்
திட்டமிடக் கையாலாகாதவன்
என்பதை உலகிற்கு உணர்த்திக்கொண்டே
இருப்பதையும் சகிக்க முடிவதில்லை
இப்போதெல்லாம் -
அனாதையான மூடிகளை
ஆதரவற்ற பேனாக்களுடன்
பொருத்தி விடுகிறேன்
நிறம் வடிவம் உள்ளிட்ட
எந்தப் பொருத்தமும் இல்லாவிட்டாலும்
பொருத்தம் பார்க்காதபோது
அவை
பொருந்திப்போகின்றன
என்ற கச்சிதத்தை வியந்து
பேனாவின் மூடிகளை மறந்துவிடும்
அசிரத்தைகளை
விரட்டமுடிவதில்லை
மூடியற்று கிடக்கும் பேனா முடிதுறந்த அரசனையையும்
பேனாவை இழந்த மூடி
சீவப்பட்டு உருண்ட தலையையும்
போன்ற படிமமாக
சமயத்தில்
அவை
நான்
திட்டமிடக் கையாலாகாதவன்
என்பதை உலகிற்கு உணர்த்திக்கொண்டே
இருப்பதையும் சகிக்க முடிவதில்லை
இப்போதெல்லாம் -
அனாதையான மூடிகளை
ஆதரவற்ற பேனாக்களுடன்
பொருத்தி விடுகிறேன்
நிறம் வடிவம் உள்ளிட்ட
எந்தப் பொருத்தமும் இல்லாவிட்டாலும்
பொருத்தம் பார்க்காதபோது
அவை
பொருந்திப்போகின்றன
என்ற கச்சிதத்தை வியந்து
2 comments:
இந்தக் கவிதை பொருத்தமற்ற பேனாக்கள் மற்றும் அவற்றின் மூடிகள் வரையிலானது என்று தோன்றாது மென்மேலும் விரிந்து பொருளூட்டுவது இதன் சிறப்பு.
அப்படியான ஒரு மறைபொருளுக்கான சாத்தியங்களுடனான லாவகம் உங்கள் மொழியின் மற்றொரு சிறப்பு.
இடைவெளியை மறக்கச் செய்யும் கவிதை.
சபாஷ் ரமேஷ் கல்யாண்.
நன்றி சுந்தர்ஜி !
Post a Comment