Monday, March 14, 2011

சிலந்தி



மூடப்படாத 
என் வீட்டு முன் வாசல் 
கதவு 

யாரும் வரலாம்
யாரும் போகலாம்
ஆனால்
யாரும் வரவில்லை
யாரும் போகவில்லை

நானே கூட

கதவு மட்டும் எப்போதாவது
உள்ளே வருவதும்
வெளியே போவதுமாய்
அசைந்தபடி அங்கேயே நிற்கிறது   

கால காலமாய்
மண்டையுள்  தொங்கும்
சிலந்தி  


        

No comments: