முன்பெப்போதோ கேட்ட
இனிமையான பாட்டொன்றின் ராகம்
மனதில் இசைய
அதன் வார்த்தைகளைக் கோர்க்க முயலும்போது
ராகம் தடம் மாறுகிறது
ராகத்தைப் பிடிக்கும்போது
வார்த்தைகள் இடறுகின்றன
இரண்டையும் சேர்த்தமைக்க முயன்று
படியும் தருணத்தில்
திடீரென்று ஒரு வானொலிப் பாட்டு வந்து மோதி
கவனம் கலைக்கிறது
எரிச்சலடைகிறேன்
அந்த வானொலிப் பாட்டு
நான் தேடுவதுதான் என்றறியக்கூட
நிதானமற்று
Saturday, November 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment