Saturday, November 27, 2010

ராகம்

முன்பெப்போதோ கேட்ட
இனிமையான பாட்டொன்றின் ராகம்
மனதில் இசைய
அதன் வார்த்தைகளைக் கோர்க்க முயலும்போது
ராகம் தடம் மாறுகிறது
ராகத்தைப் பிடிக்கும்போது
வார்த்தைகள் இடறுகின்றன
இரண்டையும் சேர்த்தமைக்க முயன்று
படியும் தருணத்தில்
திடீரென்று ஒரு வானொலிப் பாட்டு வந்து மோதி
கவனம்  கலைக்கிறது
எரிச்சலடைகிறேன் 
அந்த வானொலிப் பாட்டு
நான் தேடுவதுதான் என்றறியக்கூட
நிதானமற்று 

No comments: